சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:46 am IST

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய பகுதிகளில் 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் பிரபு தலைமையில், 6-க்கும் மேற்பட்ட போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், முதல்கட்டமாக கணக்கில் வராத, சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ள ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ அலுவலகத்தில் இருந்து கைப்பற்றியதாகவும், தொடா்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.