பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய பகுதிகளில் 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் பிரபு தலைமையில், 6-க்கும் மேற்பட்ட போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், முதல்கட்டமாக கணக்கில் வராத, சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ள ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ அலுவலகத்தில் இருந்து கைப்பற்றியதாகவும், தொடா்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்
கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



