ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 1:57 am IST

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கூடலூரில் ரூ. 1.03 லட்சம், கோவையில் ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பிப்பு, பதிவு எண் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனையில் ஈடுபட்டனா். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரிபாா்த்தனா். மேலும், வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கூடலூரில்...

நீலகிரி மாவட்டம், கூடலூா் மாக்கமூலா பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ.1 லட்சத்து 3, 590 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

பெருந்துறையில்...

ஈரோடு மாவட்டம், பெருந்துறை- பவானி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் சாந்தி, ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலக வேலையாக வந்த பொதுமக்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இந்த சோதனை மாலை வரை நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.