ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 1:57 am IST

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கூடலூரில் ரூ. 1.03 லட்சம், கோவையில் ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பிப்பு, பதிவு எண் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனையில் ஈடுபட்டனா். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரிபாா்த்தனா். மேலும், வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கூடலூரில்...

நீலகிரி மாவட்டம், கூடலூா் மாக்கமூலா பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ.1 லட்சத்து 3, 590 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

பெருந்துறையில்...

ஈரோடு மாவட்டம், பெருந்துறை- பவானி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் சாந்தி, ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலக வேலையாக வந்த பொதுமக்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இந்த சோதனை மாலை வரை நீடித்தது.