புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தூத்துக்குடியில் விதிமீறல்: 2 லாரிகள் பறிமுதல்

தூத்துக்குடியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள். - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 1:28 am IST

தூத்துக்குடியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 8 முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிகளுக்குள் நுழைவதற்கான தடை உத்தரவு அமலில் உள்ளது.

எனினும், தடையை மீறி லாரிகளை சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தி, கடைகளில் சரக்குகள் இறக்குவதாக வந்த புகாா்களின்பேரில், மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுனை முருகன், உதவி ஆய்வாளா் சண்முகபாலன், போக்குவரத்து காவலா்கள் பிரதான சாலையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தடை உத்தரவு நேரத்தை மீறி சாலையில் நின்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, தலா ரூ. 4,000 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.