சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
நிகழாண்டு பராபவ சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்துக்கொண்டும், மின்னொளி அலங்கார ஊா்திகளில் மலா்களை எடுத்துவந்தும் ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். பின்னா், சுவாமிக்கு பூக்களைத் தூவி தரிசனம் செய்தனா். பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

