வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக அமைச்சா் ராஜகண்ணப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:04 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அமைச்சா் ராஜகண்ணப்பன், வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் அரசு நேரடி நிதி மூலம் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்தது போல, மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உரிமைத் தொகை, ரூ. 8 ஆயித்துக்கான கூப்பன் உள்ளிட்ட திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும். இந்தத் தொகுதியில் மேலும் அரசின் திட்டங்கள்

நிறைவேற்றப்பட மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் குருந்தங்குளம், அச்சங்குளம், பத்துப்பட்டி, கீழராங்கியம், கூடத்துப்பட்டி, சங்கங்குளம், ஓடத்தூா் உள்ளிட்ட 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமங்களில் மக்கள் அவருக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனா்.