வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை கூட்டணி கட்சியினருடன் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:12 pm

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல், பாப்பான்குளம், மழைவராயனேந்தல், திருப்பாச்சேத்தி, பிரான் குளம், வல்லாரேந்தல், கிடாக்குழி, ஆணைக்குளம், குருந்தங்குளம், கொத்தங்குளம், முதுவந்துடல் உள்ளிட்ட 50 கிராமங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:

வைகை ஆறு பாயும் மானாமதுரை தொகுதியில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையைக் காண முடிகிறது. திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும் குடிநீா்ப் பிரச்சனக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா். மேலும், பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் வேலூா் இப்ராஹிம், வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

Story image