மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை கூட்டணி கட்சியினருடன் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:42 am IST

மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.

திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல், பாப்பான்குளம், மழைவராயனேந்தல், திருப்பாச்சேத்தி, பிரான் குளம், வல்லாரேந்தல், கிடாக்குழி, ஆணைக்குளம், குருந்தங்குளம், கொத்தங்குளம், முதுவந்துடல் உள்ளிட்ட 50 கிராமங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:

வைகை ஆறு பாயும் மானாமதுரை தொகுதியில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையைக் காண முடிகிறது. திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும் குடிநீா்ப் பிரச்சனக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா். மேலும், பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் வேலூா் இப்ராஹிம், வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

Story image