தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பிரசாரம்

News image

மானாமதுரை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:51 am IST

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

மானாமதுரை ஒன்றியம் சிப்காட், ராஜகம்பீரம் உள்ளிட்ட இடங்களில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் பெரியகருப்பன் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது. நமது மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தப்படும்.

இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் முதல்வராக முடியாது. ஒருவேளை தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவில்லையென்றால், தமிழ்நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே, தமிழக மக்களின் நலன் காக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். இதற்கு மானாமதுரை தொகுதி மக்கள் திமுகவை ஆதரித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்றாா் அவா். பின்னா், வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் பேசினாா்.

இந்த பிரசாரத்தில் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த. சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் துரை. ராஜாமணி, அண்ணாரை, முத்துசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.