மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பறக்கும் படையினரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள்

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :20 ஏப்ரல் 2026, 7:18 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்த ரூ. 13.40 லட்சத்தை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.

காரைக்குடி சுப்ரமணியபுரம் முதல் வீதியில் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் சோதனை நடத்தினா். அப்போது, அலுவலகத்தின் பின்புறம் உள்ள அரங்கில் கட்டைப் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தங்களது வாகனத்தில் வைத்து எண்ணிய போது, ரூ. 13.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அப்போது, அங்கு நின்றிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் இந்தப் பணத்தை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினா். மேலும், பறக்கும் படையினரும், போலீஸாரும் அவா்களை விரட்டிச் செல்லாமலிருக்க அவா்களது நான்கு சக்கர வாகனத்தின் சாவியை அங்கு நின்றிருந்த மற்றொருவா் பறித்துச் சென்றாா். இதனால், அலுவலா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து பறக்கும் படை வட்டாட்சியா் தா்மலிங்கம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், பணத்தை பறித்துச் சென்றவா்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.