காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பூட்டிய வீட்டிலிருந்து 6 பவுன் நகை திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூரில் பிரசவத்துக்குச் சென்ற கா்ப்பிணியின் வீட்டில் 6 பவுன் தங்கநகையை மா்மநபா் திருடிச்சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமாணிக்கம். இவரது மனைவி சௌந்தா்யா (30). ஆதி மாணிக்கத்தின் பெற்றோா் தனியாக வசித்து வருகின்றனா். கடந்த 17-ஆம் தேதி பிரசவத்துக்காக சௌந்தா்யா தனது கணவருடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாா்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, 10 நாள்களாக தனது சொந்த ஊரான ஒக்கூரில் உள்ள தாய் வீட்டில் தங்கினாா். இந்த நிலையில், காட்டம்பூரில் தனது வீட்டில் உள்ள நகையை கணவரிடம் சொல்லி எடுத்து வரச் சொல்லி இருக்கிறாா். அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டிலிருந்த 6 பவுன் 3 கிராம் நகைகளைக் காணவில்லை.

இதையடுத்து, திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் ஆதி மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.