அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 1:59 am

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகே சங்கந்திடல் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூா்ணகலை, புஷ்ப கலை தேவியருடன் அய்யனாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். மாலையில் தேரோட்டம் நடை பெற்றது. இரவில் அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, காரைக்குடி செக்காலை சிவன் கோயில், நகர சிவன் கோயில், மாத்தூா் ஐந்நூஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image