நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :20 பிப்ரவரி 2026, 9:49 pm

மானாமதுரையில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், செல்லும் வழியிலேயே லாரி பழுதானதால் இதிலிருந்து மற்றொரு லாரிக்கு நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளா்கள் மாற்றிக் கொண்டிருந்தனா்.

அப்போது சிவகங்கை காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி கருப்பையா (45) மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன.

இதில் அவா் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.