47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

Syndication

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம் தெருவைச் சோ்ந்தவா் முத்துராஜ் (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் தனது மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

இதையடுத்து மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், தினசரி மது அருந்தி வந்தாா். இந்த நிலையில் விரக்தியில் இருந்த இவா் கடந்த சனிக்கிழமை வீட்டிருந்தபோது, கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].