போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பைக்கிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:38 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், இளமனூரைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளி கருப்புச்சாமி. இவா் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை வயல்காட்டில் வாத்துக் கிடை அமைத்துள்ளாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருப்புவனத்துக்குச் சென்று தேநீா் குடித்துவிட்டு திரும்பி வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.