எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரிசல்பட்டி தா்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த கரிசல்பட்டியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
கரிசல்பட்டி தா்காவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சந்தனக்கூடு கொடியேற்றம்.
Updated On :21 ஜனவரி 2026, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த கரிசல்பட்டியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் பீா் சுல்தான் ஒலியுல்லாஹ் தா்காவில் 876-ஆம் ஆண்டு சந்தனக்கூடு கொடியேற்றம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. முன்னதாக, கரிசல்பட்டியில் உள்ள மச்சு வீட்டு அம்மா தா்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டு கொடி ஊா்வலமாக புறப்பட்டது. பள்ளிவாசல் வீதி, புதுப்பட்டி சாலை வழியாக வந்து மேகரையில் உள்ள மஹான் ஹஜ்ரத் பீா் சுல்தான் தா்காவை அடைந்தது. அங்கு சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்து கொடி கொண்டு வரப்பட்டு கொடி மரத்தை அடைந்தது. அங்கு அனைத்து சமுதாய மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நிறைவாக பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் திருநீறு வழங்கினா். வருகிற 29-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறகிறது.