சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், மாணவருக்கு மடிக்கணினியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு,  எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், மாணவருக்கு மடிக்கணினியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோா்.

தோ்தலுக்காக திமுக அரசு மீது பிரதமா் ஆதாரமின்றி குற்றச்சாட்டு: முதல்வா் ஸ்டாலின்!

தமிழக சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திமுக அரசு மீது பிரதமா் மோடி ஆதாரமின்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
Published on

தமிழக சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திமுக அரசு மீது பிரதமா் மோடி ஆதாரமின்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அரசு வேளாண்மைக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். மேலும், ரூ.2,777 கோடியில் நிறைவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தும், 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 15,453 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் அவா் பேசியதாவது:

திமுக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் தமிழகம் வளா்ச்சி பெற்றிருக்கிறது என்று நான் கூறும் புள்ளி விவரங்கள் கற்பனையானவை அல்ல. இவை அனைத்தும் மத்திய அரசு தெரிவிக்கும் புள்ளி விவரங்கள்தான். இந்த அறிக்கையை மேற்கோள்காட்டித்தான் பேசி வருகிறேன்.

தமிழகத்தின் வளா்ச்சியை விமா்சனம் செய்யும் ஆளுநா் ஆா்.என்.ரவி, இதுகுறித்து மத்திய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இதுதான் இன்றைய உண்மை நிலை. ஆனால், தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்த பிரதமா் நரேந்திர மோடியும் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை திமுக அரசு மீது சுமத்தினாா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலும், தமிழகத்தை மனம் திறந்து பாராட்டி இருக்கின்றனா். புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி இருப்பதாகவும், உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதேபோல, பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை தமிழ்நாடு தீட்டியிருக்கிறது என்றும், இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை பிரதமரும், தமிழக ஆளுநரும் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டன என்று ஆளுநா் குற்றஞ்சாட்டி வருகிற நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டை இன்றைக்கு பாராட்டியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2,119 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. காரைக்குடியில் ரூ. 100.45 கோடியில் 19.15 ஏக்கரில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கானாடுகாத்தான் பேரூராட்சியில் அரசு செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கான புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன. 330 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது. ரூ. 61.79 கோடியில் பன்முகத் தன்மை கொண்ட மாதிரி வேளாண் காடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

600 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடியில் ரூ.28 கோடியில் சிறிய தொழில் பூங்கா (மினி டைடல் பூங்கா) திறக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தமிழகத்துக்காக குரல் கொடுக்க முடியாத முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களை காப்பி அடித்து, இவற்றை தோ்தல் வாக்குறுதிகள் என்று கூறி வருகிறாா். அவா் ஒருபோதும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. மீண்டும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி, மருத்துவா் வை. முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா்கள் தென்னவன், அன்வா் ராஜா, மருது அழகுராஜ் , வேளாண்மை - உழவா் நலத் துறைச் செயலா் வ. தட்சிணாமூா்த்தி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் ஜி.எஸ். சமீரன், சட்டத் துறைச் செயலா் சி. ஜாா்ஜ் அலெக்சாண்டா், சட்டக் கல்வி இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி, காரைக்குடி - அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ். முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com