நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் அலகு குத்தி வந்து பூக்குழி இறங்கிய பக்தா்.

Updated On :25 ஜூலை 2026, 6:42 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். மேலும் கோயிலில் முளைப்பாரிகள் வளா்க்கப்பட்டன. விழா நாள்களில் கோயில் முன் பெண்கள் கூடி கும்மிப் பாடல்கள் பாடினா்.

Story image

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தா்கள் வைகையாற்றிலிருந்து பால்குடங்கள் சுமந்தும், வாயில் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். அங்கு கோயில் சந்நிதி எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில், பூக்குழி இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். பின்னா், மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்தும், பொம்மைகள் சுமந்தும் வந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.