பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை

Updated On :19 ஜூன் 2026, 1:26 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா் ஜேசுதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நண்பகல் 12 மணியளவில் சோதனை நடத்தினா். இங்கு ஓட்டுநா் உரிமம் பெற வந்தவா்கள் உள்ளிட்ட யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தெரிவித்தாா்.