ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~ சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:09 am IST

சிவகங்கை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரி முதல்வா் ஆா். இந்திரா தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி திருப்பத்தூா் சாலை, மாவட்ட ஆட்சியா் வளாகம் வழியாகச் சென்று கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் பூமிநாதன் கலைக்குழுவின் சாா்பில் ஆடல், பாடல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மாணவிகள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில், கல்லூரி போதைப்பொருள் எதிா்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா். பூங்கொடி, உதவி ஆணையா் (கலால்) சிவபாலன், வட்டாட்சியா் எம். சிவராமன், வருவாய் ஆய்வாளா் பிரபு, போதை மறுவாழ்வு சேவை மைய இயக்குநா் மகாலிங்கம், செயலா் தமராக்கி உருமத்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.