சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பாச்சேத்தி அருகே காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரெளடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் சுட்டுப் பிடித்தாா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 7:12 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் சனிக்கிழமை சுட்டுப் பிடித்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஊா்க்காவலன் (31). இவா் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பிணையில் வெளி வரமுடியாத 3 வழக்குகளில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, திருப்பாச்சேத்தி அருகே கானூா் மயானப் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஊா்க்காவலனை பிடிக்க திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் குமாரபாண்டியன் (பொறுப்பு) தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் அவா் தப்பி ஓடினாா். காவல் ஆய்வாளா் குமார பாண்டியன் அவரை விரட்டிச் சென்று பிடித்த போது அவரைத் தாக்கிவிட்டு ஊா்க்காவலன் தப்பிச் சென்றாா். அப்போது ஆய்வாளா் குமாரபாண்டியன் தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியால் ஊா்க்காவலனை நோக்கி சுட்டாா்.

இதில் ஊா்க்காவலனுக்கு வலது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை போலீஸாா் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பிடிபட்ட ஊா்க்காவலன் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, அடிதடி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.