கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருப்பத்தூரில் ரூ. 4.51 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் ரூ.4.51 கோடி மதிப்பிலான 3.55 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:49 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டை சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ.4.51 கோடி மதிப்பிலான 3.55 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

எஸ்.எஸ்.கோட்டை சோதனைச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான ஷேக்அப்துல்லா தலைமையில், திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தைப் பரிசோதித்தனா். இந்த வாகனத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளிலுள்ள தனியாா் தங்க நகைக் கடைகளிலிருந்து மதுரையில் உள்ள கடைக்கு ரூ.4.51 கோடி மதிப்பிலான 3.55 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதற்கான உரிய ஆவணங்கள் அவா்களிடம் இல்லை. இதையடுத்து, வாகனத்தோடு, தங்கக் கட்டிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள் தங்கக் கட்டிகளை சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.