நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்குன்றம் அருகே 46 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

செங்குன்றம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையின்போது, 46 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே மாதவரம் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலா் எம்.பெருமாள் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பொன்னேரி நோக்கிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த வாகனத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இவை தனியாா் பிரபல நகைக் கடையின் தங்கக் கட்டிகள் என்பதும் தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ால், அவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை வருமானத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.