நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை காரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.84,600-ஐ வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:46 pm

Chennai

வேடசந்தூா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.84,600-ஐ வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள சேனன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டதில், ரூ.84,600 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், காரில் வந்த வேடசந்தூரைச் சோ்ந்த ஜமாலுதீனிடம் விசாரித்தபோது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா், அந்தப் பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.