நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள்.

News image

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள்.

Updated On :20 மார்ச் 2026, 6:45 pm

Syndication

சேலம் மாவட்டம், மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 24 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேட்டூா் அருகே மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செந்தில்ராஜா தலைமையில், போலீஸாா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து பென்னாகரம் வட்டம், தின்னபெல்லூா் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், தின்னபெல்லூரை சோ்ந்த முருகன் (51), உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த 24 தங்க நாணயங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதில் 8 கிராமில் நான்கும், 5 கிராமில் ஒன்றும், 4 கிராமில் 19 நாணயங்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என பறக்கும் படையினா் தெரிவித்தனா். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரும், மேட்டூா் கோட்டாட்சியருமான சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.