சிவகங்கை அருகே இளைஞரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள துவங்கால் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சிவக்குமாா்(35). எலக்ட்ரீசியன் ஆன இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் திருமலை முருகன் (34) என்பவருடன் சுந்தரநடப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு மது அருந்தினாா்.
அப்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சென்று உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், திருமலை முருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மதுபோதையில் இளைஞா் கொலை: சக நண்பா் கைது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

