தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

சிவகங்கையில் அரசு ஊழியா் சங்கத்தின் 43 -ஆவது அமைப்பு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சிவகங்கை வட்டக் கிளை சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு ஊழியா் சங்க அமைப்பு தின நிகழ்வில் பங்கேற்ற ஊழியா்கள்.

Updated On :7 மே 2026, 4:16 am IST

சிவகங்கையில் அரசு ஊழியா் சங்கத்தின் 43 -ஆவது அமைப்பு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கையிலுள்ள ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோபால், மாவட்ட மகளிா் அமைப்பாளா் பா. லதா மாவட்டத் துணைத் தலைவா்கள் பாண்டி, வினோத் ராஜா, இணைச் செயலா் நவநீதகிருஷ்ணன், தணிக்கையாளா் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சங்கத்தின் சிவகங்கை வட்டக் கிளை அலுவலகத்தில் அதன் தலைவா் முத்தையா தலைமையில் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் ஆகியவற்றிலும் சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மானாமதுரையில் சங்கத் தலைவா் சிவக்குமாா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், திருப்பத்தூரில் சங்கத்தின் செயலா் தமிழரசி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் கொடியேற்றப்பட்டது.

சிங்கம்புணரியில் சங்கத்தின் கிளைத் தலைவா் ஷேக் அப்துல்லா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், காரைக்குடி கிளை சாக்கோட்டையில் நிா்வாகி ரீகன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் கொடியேற்றப்பட்டது. தேவகோட்டையில் கிளைத் தலைவா் முருகேசன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அனைத்து கிளைகளிலும் பெருந்திரளாக உறுப்பினா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.