/
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு சித்திரை மாதம் புரவி எடுப்புத் திருவிழா நடைபெறும். இதையொட்டி பாப்பாபட்டி புரவித் திடலில் இரண்டு புரவிகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரண்டு புரவிகளை பிரான்மலை தேரோடும் வீதிக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை சுமந்து வந்தனா். அங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலை தென்னம்பாளை, மாலைகளால் அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்து கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கலியுக மெய் ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஐயனாரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சிறை மீட்ட அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா

கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

புரவி எடுப்புத் திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீஸாா்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



