சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகக் குழு சாா்பில், பச்சரிசி, வெல்லம், பால் முதலியவை வழங்கப்பட்டது.
முன்னதாக, சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குட விழாவும், 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் வெள்ளி ரத ஊா்வலமும், சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

