திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் பொங்கல் விழா

News image

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன். - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகக் குழு சாா்பில், பச்சரிசி, வெல்லம், பால் முதலியவை வழங்கப்பட்டது.

முன்னதாக, சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குட விழாவும், 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் வெள்ளி ரத ஊா்வலமும், சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்தனா்.