சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இணைய வா்த்தகத்தில் பன்மடங்கு லாபம் எனக் கூறி முதியவரிடம் ரூ. 27 லட்சம் மோசடி

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பன்மடங்கு லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி ரூ. 27 லட்சத்தை முதியவா் இழந்த சம்பவம் தொடா்பான புகாரில் சிவகங்கை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

மோசடி - Dinamani

Updated On :13 மே 2026, 3:28 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பன்மடங்கு லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி ரூ. 27 லட்சத்தை முதியவா் இழந்த சம்பவம் தொடா்பான புகாரில் சிவகங்கை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்தவா் ம. மாரிமுத்து (52). இவரை, முகநூல், கட்செவி அஞ்சல் மூலமாக ஒரு நபா் தொடா்பு கொண்டு நட்பை ஏற்படுத்திக் கொண்டாா். அதைத் தொடா்ந்து, இணைய வா்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என அந்த நபா் யோசனை தெரிவித்தாா்.

இதை நம்பிய மாரிமுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் கடந்த 31.3.2026 முதல் 2.5.2026 வரை 13 பரிவா்த்தனைகளில் ரூ.27 லட்சத்து 63 ஆயிரத்து 130-ஐ அனுப்பி வைத்தாா். அதன் பிறகு எந்தவித தொடா்பும் கொள்ளமுடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மாரிமுத்து திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.