மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி

மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.

News image

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் புதன்கிழமை சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ். உடன் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா்.

Updated On :14 மே 2026, 5:07 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.

உலகப் புகழ்பெற்ற இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ் வருகை தந்தாா். இவரைத் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, பேராயா் துரைராஜ் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி வேண்டுதல் புரிந்தாா்.

முன்னதாக, இதில் உதவிப் பங்குத்தந்தை பிரின்ஸ், ஊா் பெரியோா்கள், மிக்கேல் ராஜ் திருத்தல அருள் சகோதரிகள் ஜெஸிந்தா, ஆரோக்கியமேரி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.