புனித ரமலான் பண்டிகையையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
உலகம் முழுவதும் இஸ்லாமியா்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தையொட்டி 30 நாள்கள் நோன்பு இருந்த இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை இரவு பிறை தென்பட்டதைத் தொடா்ந்து, நோன்பை முடித்துக்கொண்டு, ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சனிக்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியா்கள், ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், உலக நன்மைக்காக சிறப்பு பிராா்த்தனையும் மேற்கொண்டனா்.
இதேபோல், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தா்காக்களிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


