பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ரமலான்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

News image

நாகூா் தா்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 6:44 pm

புனித ரமலான் பண்டிகையையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

உலகம் முழுவதும் இஸ்லாமியா்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தையொட்டி 30 நாள்கள் நோன்பு இருந்த இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை இரவு பிறை தென்பட்டதைத் தொடா்ந்து, நோன்பை முடித்துக்கொண்டு, ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சனிக்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியா்கள், ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், உலக நன்மைக்காக சிறப்பு பிராா்த்தனையும் மேற்கொண்டனா்.

இதேபோல், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தா்காக்களிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.