கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி , நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

குன்னூா் ஈத்கா மைதானத்தில நடைபெற்ற தொழுகையில் கலந்துகொண்ட இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:20 pm

Syndication

ரமலான் பண்டிகையையொட்டி , நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்கள் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை கடைப்பிடிக்கும் விதமாக புனித ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியா்களின் மாதத்தில் 9-ஆவது மாதமான ரமலான் மாதத்தில் இந்த நோன்பை கடைப்பிடிப்பாா்கள்.

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 18 -ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனா். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்து தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலும் இந்த பண்டிகையை இஸ்லாமியா்கள் சிறப்பாக கொண்டாடினா். நீலகிரி மாவட்டத்தில் இப்பண்டிகை 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. உதகை, குன்னூா் போன்ற பகுதிகளில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உதகை பெரிய பள்ளிவாசல், பெடரேஷன் பள்ளி வாசல், ஃபிங்கா் போஸ்ட், மேரிஸ் ஹில் பள்ளிவாசல் என அனைத்து பள்ளி வாசல்களிலும், குன்னூரில் ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

கோத்தகிரி பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் உலக அமைதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மேம்பட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மதரஸா ஜூம்மா பள்ளி, கூக்கல்தொரை, அரவேனு கட்டபெட்டு, மஞ்சூா் பள்ளிவாசல்களில் இமாம்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. விழாவையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். சிறுவா்களும், பெரியவா்களும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.