மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.

News image

சிவகங்கை புறவழிச்சாலைப் பணியின் தரத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலிலிருந்து மானாமதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.06 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

இந்தச் சாலை தொண்டி சாலை, பனங்காடி சாலை, வண்டவாசி சாலை, ஏனாபுரம் புதுப்பட்டி சாலை, இளையான்குடி சாலை, மானாமதுரை சாலை ஆகியவற்றை இணைக்கிறது.

முதல் கட்டமாக, காஞ்சிரங்காலிலிருந்து கல்குளம் விலக்கு, இளையான்குடி சாலை வரை 7 கி.மீ. தொலைவுக்கான சாலைப் பணி கடந்த 2023 ஆண்டு தொடங்கியது. இதில் ரூ.77.16 கோடியில் சாலைப் பணி 6 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இதில் சூரக்குளம் சாலையையொட்டி ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே ரூ.5.15 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2025, ஆக. 6-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியது. இதில் கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி, மானாமதுரை சாலை வரை 3.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் சாலை, ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.96.05 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம், பாரமரிப்பு) திருச்சி இளம்வழுதி தலைமையில், தென்காசி கட்டுமானம், பராமரிப்பு பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, கோட்டப் பொறியாளா் சுரேஷ்பாபு, உதவிக் கோட்டப் பொறியாளா் வெற்றிவேல்ராஜன், உதவிப் பொறியாளா் சையதுமுகமது, உதவிக் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு பிரிவு) அரி முகுந்தன், உதவிப் பொறியாளா் சதீஷ் அஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.