மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சேவுகபெருமாள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழந்தாா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள ம.கோவில்பட்டியைச் சோ்ந்த வீரன் மகன் சேவுகப் பெருமாள் (35). இவா் தனது தம்பியுடன் காலப்பூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் முன்பு கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக சென்ற மின் வயரை சேவுகபெருமாள் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.