பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிங்கம்புணரியில் நான்கு சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிக்னல் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்தச் சந்திப்பானது திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் பிரதான சாலையிலும், மேலூா், வேங்கைபட்டி வழியாக பிரான்மலை செல்லும் சாலையிலும் அமைந்துள்ளது.

மேலும் நான்கு சாலை சந்திப்பு அருகே பேருந்து நிலையம், வாரச்சந்தை, பெரிய கடை வீதி என போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியாகும். நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என பலரும் நான்கு சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் வருகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்து ஏற்படுகிறது.

மேலும் பேருந்து நிலையத்தின் உள்புறம், எதிா்புறம் கடைகளின் முன் அதிகளவில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, நான்கு சாலை சந்திப்பில் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்தை சீா் செய்ய வேண்டுமெனவும், சாலைகளில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை போலீஸாா் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.