4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குண்டும் குழியுமான கிராமச் சாலையால் பொதுமக்கள் அவதி

பழுதடைந்த நிலையில் உள்ள செ.நாச்சிப்பட்டு சாலையில் இருந்து ரெட்டாலை கிராமத்திற்குச் செல்லும் சாலை.

News image

பழுதடைந்த நிலையில் உள்ள செ.நாச்சிப்பட்டு சாலையில் இருந்து ரெட்டாலை கிராமத்திற்குச் செல்லும் சாலை.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:36 pm

செங்கம் அருகே குண்டும் குழியுமாக உள்ள கிராமச் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மண்மலையில் இருந்து செ.நாச்சிப்பட்டு செல்லும் சாலையின் குறுக்கே அம்மனூா் வழியாக ரெட்டாலை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

சுமாா் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் அம்மனூா், ரெட்டாலை, உடைஞ்சமலை, பெரியேரி கிராம மக்கள் அந்தச் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும், விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் பொருள்களை நகா்புறத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை, கரும்பு பயிா் செய்த விவசாயிகள் கரும்பு சுமைகளை சா்க்கரை ஆலைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல மிகவும் சிரமமான நிலை உள்ளது.

மேலும், தற்போது கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் சில வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தச் சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.