சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பழைய நெடுவயல் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டு திடலுக்குச் சென்று, கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து, அதை அவிழ்த்து விட்டனா். இதையடுத்து, சிவகங்கை, மதுரை, மேலூா், புதுக்கோட்டை, சிங்கம்புணரி, பொன்னமராவதி, மதகுபட்டி, காரைக்குடி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் காளைகள் முட்டியதில் 5 போ் லேசான காயமடைந்தனா்.
இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா். பாதுகாப்புப் பணியில் உலகம்பட்டி போலீஸாா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

ஐயப்பன் கோயிலில் படி பூஜை

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



