ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பழைய நெடுவயலில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பழைய நெடுவயல் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பழைய நெடுவயல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

Updated On :21 மே 2026, 1:46 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பழைய நெடுவயல் ஆதீன மிளகி அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஊா் முக்கியப் பிரமுகா்கள் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டு திடலுக்குச் சென்று, கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்து, அதை அவிழ்த்து விட்டனா். இதையடுத்து, சிவகங்கை, மதுரை, மேலூா், புதுக்கோட்டை, சிங்கம்புணரி, பொன்னமராவதி, மதகுபட்டி, காரைக்குடி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் 5 போ் லேசான காயமடைந்தனா்.

இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா். பாதுகாப்புப் பணியில் உலகம்பட்டி போலீஸாா் ஈடுபட்டனா்.