ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் மூத்தான்கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:54 pm

சிங்கம்புணரி அருகேயுள்ள கல்லம்பட்டி புதுப்பட்டியில் மூத்தான்கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் சிங்கம்புணரி, காளாப்பூா், சூரக்குடி, மருதிப்பட்டி, முறையூா், செம்மணிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராமத்தின் சாா்பாக கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

இதைத் தொடா்ந்து கட்டுமாடுகள் ஆங்காங்கே வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டு பிடித்தனா். பல காளைகள் பிடிபட வில்லை.

மஞ்சுவிரட்டை கள்ளம்பட்டி புதுப்பட்டி, இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா். காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். இவா்கள் சிங்கம்புணரி தலைமை வட்டார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு என 5 போ் மீது சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.