தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிலம்பாட்டப் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

News image

மாநில சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகளைப் பாராட்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி. உடன் பயிற்சியாளா் செல்வம்.

Updated On :21 மே 2026, 2:25 am IST

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் கடந்த வாரம் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் அதன் தலைமை பயிற்சியாளா் செல்வம் தலைமையில் பங்கேற்றனா். போட்டியில் மு. ரித்தீஸ் இரட்டைக் கம்பு 17 வயது பிரிவில் முதலிடமும், அகதீஸ்குமாா் ஒற்றைக் கம்பு 19 வயது பிரிவில் முதலிடமும், புகழேஷ் இரட்டைக் கம்பு 14 வயது பிரிவில் முதலிடமும், மதன்குமாா் ஒற்றைக்கம்பு 17 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.

மேலும் மாவட்ட, வட்டார அளவிலான போட்டிகளில் மாணவா்கள் கரண்குமாா், ஷெரோன், மாணவிகள் சுவாதி, ஷாலினி, ரோஷினி, ராஜேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு வெற்றிப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் செல்வம் ஆகியோரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.