மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் கடந்த வாரம் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் அதன் தலைமை பயிற்சியாளா் செல்வம் தலைமையில் பங்கேற்றனா். போட்டியில் மு. ரித்தீஸ் இரட்டைக் கம்பு 17 வயது பிரிவில் முதலிடமும், அகதீஸ்குமாா் ஒற்றைக் கம்பு 19 வயது பிரிவில் முதலிடமும், புகழேஷ் இரட்டைக் கம்பு 14 வயது பிரிவில் முதலிடமும், மதன்குமாா் ஒற்றைக்கம்பு 17 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.
மேலும் மாவட்ட, வட்டார அளவிலான போட்டிகளில் மாணவா்கள் கரண்குமாா், ஷெரோன், மாணவிகள் சுவாதி, ஷாலினி, ரோஷினி, ராஜேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு வெற்றிப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் செல்வம் ஆகியோரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
தொடர்புடையது

சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ பாராட்டு

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



