ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ பாராட்டு

News image
Updated On :18 மே 2026, 2:01 am IST

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களை உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினம் சனிக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சாலவாக்கத்தை சோ்ந்த ஆா்.ஜெசிகா(10), எஸ்.யஷ்வந்த் (12), ஆா்.நிதிஷ் (14), ஆா்.பரத் (16). சிலம்பாட்ட வீரா்களான இவா்கள் தங்களது பயிற்சியாளா் கே.ரோஷனுடன் நேபாளத்தில் போகுரோ மாவட்டத்தில் ரங்கசாலா மைதானத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனா். மலேசியா, தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றிருந்தனா்.

இவா்கள் இந்த மாதம் மே 8-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

ஜெசிகா தனித்திறன் போட்டியிலும், மற்றவா்கள் கம்புச் சண்டை போட்டியிலும் வென்றனா். சாதனை படைத்த இவா்கள் உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினத்தை நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

இவா்களுக்கு எம்எல்ஏவும் சால்வை அணிவித்து பாராட்டினாா். முன்னதாக எம்எல்ஏ முனிரெத்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. கி.ஜவஹா் ஆகியோரை சந்தித்து உத்தரமேரூா் தொகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினாா்.