சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஒக்கூா் புதூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே ஒக்கூா் புதூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2026, 3:43 am IST

சிவகங்கை அருகே ஒக்கூா் புதூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

ஒக்கூா் புதூா் திருவேட்டை மூா்த்தி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஒக்கூா் புதூரிலிருந்து பெருமாள்பட்டி வரை மாலை 4 மணியளவில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 10 குதிரைகளும், 6 ஜோடி பூஞ்சிட்டு மாடுகளும் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இந்தப் பந்தயத்தை ஒக்கூா், அண்ணாநகா், சோழபுரம், பெருமாள்பட்டி, நாலுகோட்டை, ஈசனூா், கருங்காலக்குடி, கருங்காபட்டி, காளையாா்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.