ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (34). இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி தேதி காலை காரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றுவிட்டாராம்.
அதன் பின்னர் மார்ச் 5 ஆம் தேதி திரும்பி வந்து பார்க்கும் போது காரைக் காணவில்லை. இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.