போடியில், புதன்கிழமை, தங்கையுடன் பழகியதை கண்டித்த மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போடி எஸ்.எஸ்.புரத்தில் வசிப்பவர் மணிகண்டன் (29). இவரது மனைவி புவனேஸ்வரி. (25). மணிகண்டன் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் புவனேஸ்வரியின் தங்கையுடன் மணிகண்டன் தவறான நோக்கத்தில் பழகி வந்துள்ளார். இதனை புவனேஸ்வரி கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், புவனேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.