தேர்தல் பறக்கும் படை அதிகாரி போல் நடித்து விவசாயியிடம் நகை, பணம் பறிப்பு

ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி போல் நடித்து விவசாயியிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்துச் சென்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
Updated on
1 min read


ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி போல் நடித்து விவசாயியிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்துச் சென்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
        ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (60).இவர் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-பழனி சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தாராம். 
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் நான் தேர்தல் பறக்கும் படை அதிகாரி என்றும், உன்னை சோதனை செய்ய வேண்டும் என்றாராம். இதனால் பயத்து போன விவசாயி தன்னிடம் இருந்த ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் மோதிரத்தை எடுத்து கொடுத்து விட்டாராம். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாம்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com