தேனி மாவட்டத்தில் மழைக்கு 6 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், 6 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், 6 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இது குறித்து மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் கடந்த அக். 29 ஆம் தேதி முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. தொடா் மழையால் பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மொத்தம் 3 வீடுகளின் சுவா் இடிந்து விழுந்துள்ளன. போடியில் 2 வீடுகள் பகுதி அளவிலும், ஒரு வீடு முழுமையாகவும் இடிந்து விழுந்துள்ளது.

மாவட்டத்தில் மழையால் 10 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து, தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com