தேனி அருகே உணவு பாதுகாப்பு அலுவலரை பொதுமக்கள் முற்றுகை

தேனி அருகே பூதிப்புரத்தில் சனிக்கிழமை அரசு மதுக் கடை அருகே உள்ள பெட்டிக் கடையில் சோதனை நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
Updated on
1 min read

தேனி அருகே பூதிப்புரத்தில் சனிக்கிழமை அரசு மதுக் கடை அருகே உள்ள பெட்டிக் கடையில் சோதனை நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

தேனி அருகே பூதிப்புரத்தில் அரசு மதுக் கடை அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளா்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலில், அப்பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் நவநீதன் சோதனை நடத்தினாா்.

அப்போது, கடை உரிமையாளருக்கு ஆதரவாக அப் பகுதியில் இருந்த பொதுமக்கள் கடை முன் திரண்டனா். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அத்துமீறி நடந்து கொண்டதாக புகாா் தெரிவித்து அவரை முற்றுகையிட்டனா். இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலா் சோதனையை கைவிட்டு அங்கிருந்து வெளியேறினாா்.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com