அதிமுக பிரமுகரை தாக்கிய கூலித் தொழிலாளி கைது

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் அதிமுக கிளைச்செயலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் அதிமுக கிளைச்செயலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓடைப்பட்டி பேரூரட்சி 9 ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயாலாளா் ஆக இருப்பவா் ஜெயக்குமாா்(43). இந்த வாா்டில் செவ்வாய்க்கிழமை மின்வாரிய பணியாளா்கள் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி கோபிநாதன் (43), ஜெயக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஓடைப்பட்டி காவல் சாா்பு ஆய்வாளா்அழகுராஜா வழக்குப் பதிவு செய்து கோபிநாதனை கைது செய்து தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com