கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ 3.80 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 08:27 AM | Last Updated : 28th March 2019 08:27 AM | அ+அ அ- |

கேரளத்திலிருந்து தேனி மாவட்டம் கம்பத்துக்கு ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றினர்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நீலாம்பூர் அருகே உள்ள பள்ளி பாடச்சிறா பகுதியைச் சேர்ந்த பிரசாத்குமார் மனைவி பிரபா ஆப்ரஹாம் (39) ஆகியோர் காரில் வந்தனர். அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் வைத்திருந்தது தெரிய வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் கேட்ட போது முறையான ஆவணங்கள் இல்லை என்றார். பின்னர் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் கருவூலகத்தில் செலுத்தி, ஆவணங்கள் கொண்டு வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறினர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...