தேனி மாவட்டத்தில் 2 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத்
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வடுகபட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 702 ஆண்கள், 703 பெண்கள் உள்பட மொத்தம் 1,405 பேர் வாக்களிக்கின்றனர். பாலசமுத்திரம், கம்மவார் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் உள்பட மொத்தம் 1,255 பேர் வாக்களிக்கின்றனர்.
 இரு வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மறு வாக்குப் பதிவு நடைபெறும் இரு வாக்குச் சாவடிகளில் தலா 6 பேர் வீதம் மொத்தம்   வருவாய்த் துறை அலுவலர்கள் 12 பேர் வாக்குப் பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலசமுத்திரம் வாக்குச் சாவடி பகுதியில் 121 போலீஸாரும், வடுகபட்டி வாக்குச் சாவடி பகுதியில் 178 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் 25 துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com