ஆண்டிபட்டியில் மின் மயானம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதி ஒதுக்கீடு

ஆண்டிபட்டியில் மின் மயானம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக வெள்ளிக்கிழமை எம்எல்ஏ ஆ.மகாராசன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

ஆண்டிபட்டியில் மின் மயானம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக வெள்ளிக்கிழமை எம்எல்ஏ ஆ.மகாராசன் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தாா்.

ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து பேரூராட்சி அலுவலா்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா் கேட்டறிந்தாா்.

அப்போது ஆண்டிபட்டியில் 3 மயானங்களை ஒன்றிணைத்து நவீன பூங்கா வசதியுடன் மின் மயானம் அமைக்க நிதி ஒதுக்கவும், 2-ஆவது வாா்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டவும், 18 வாா்டுகளில் உள்ள தெருக்களில், சாலை வசதி இல்லாத இடங்களில் பேவா் பிளாக் கல் பதிக்கவும், தண்ணீா் வசதிக்கு முன் உரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் எம்.எல்.ஏ.மகாராசன் தெரிவித்தாா். கூட்டத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவா் ராமசாமி மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com